Saturday, November 19, 2011

காவலர் நலத்திட்டங்கள்

போலீசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் இரு திட்டங்களும் இங்கே குறிப்பிடத்தக்கவை.

“சாலை விபத்துகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்”.

“விபசாரத்தில் இருந்து மீட்கப்படுவோரின் வாழ்வாதரம் மேம்படவும், நிவாரணம் பெறவும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்”

இவற்றை காவல்துறைக்கான புதிய திட்டமாக குறிப்பிட்டிருப்பது ஏன் என்று வாசகர்கள் குழம்பக்கூடும். விபத்தில் உயிரிழப்போரும் விபச்சாரத்திலிருந்து மீட்கப்படுவோரும் காவல்துறையினர் என்ற பொருளில் இத்திட்டத்தை நிச்சயம் அறிவித்திருக்க மாட்டார்கள். மேற்படி தொகைகளை முழுமையாகவோ, பகுதியாவோ விழுங்க விருப்பவர்கள் காவல்துறையினர்தான் என்பதனால் இவற்றையும் காவல்துறைக்கான நலத்திட்டப் பட்டியலில் எதார்த்தமாக சேர்த்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இருப்பினும் “லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர். ஆகவே, இனி காவல் நிலையத்துக்கு செல்லும் குடிமக்கள், உள்ளே நுழைந்தவுடன் முதல்வரின் பிளாஸ்டிக் நாற்காலி எங்கே என்று கேட்டு அதில் படையப்பா ஸ்டைலில் அமர்வதுடன், லஞ்சம் கேட்டால் முதல்வரின் மேற்படி வசனத்தைப் பேசிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment