Sunday, December 29, 2013

தந்துகி: முக்காலம் - ஆதவன் தீட்சண்யா

தந்துகி: முக்காலம் - ஆதவன் தீட்சண்யா: உடலை தளர்வாக வைத்துக்கொண்டு இறுக மூடிக்கொள்ளுங்கள் கண்களை இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறீர்கள் நீங்கள் உறங்கிக்கொ...

Wednesday, October 16, 2013

வாசித்ததும் (ரொம்பவே) யோசித்ததும்

பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ!!

Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 61 )

Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 61 ): நண்பர்கள் வேடத்தில்  எதிரிகள்!  நண்பர்களே! இயற்கை வேளாண்மை மீண்டும் திரும்ப விடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் அதற்கு எதிராகப்...

Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 61 )

Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 61 ): நண்பர்கள் வேடத்தில்  எதிரிகள்!  நண்பர்களே! இயற்கை வேளாண்மை மீண்டும் திரும்ப விடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் அதற்கு எதிராகப்...

Sunday, October 13, 2013

கவின் மலர்: பிரியம் சமைக்கிற கூடொன்று

கவின் மலர்: பிரியம் சமைக்கிற கூடொன்று: சி ல ஆண்டுகளுக்கு முன் தீக்கதிர் அலுவலகத்தில் அமர்ந்து கூகிளில் எதையோ தேடிக்கொண்டிருந்தேன். எதையோ தேட எதோ சிக்கியது போல என் கண்களுக்குத் தென...

Saturday, August 10, 2013

இறைவன் கொடுத்த தண்டனை அல்ல...!

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...!

திண்டிவனம் அருகேயுள்ள பரங்கணி என்ற கிராமத்தில் இரண்டரை வயதுள்ள ஒரு குழந்தைக்கு தானாகவே உடலில் தீப்பற்றி எரியக்கூடிய நோய் இருக்கிறது. இதைக்கண்ட கிராமத்தார் அந்தக் குடும்பத்தை தெய்வகுற்றம் என்று கூறி ஊரைவிட்டு ஒதுக்கியுள்ளனர். இப்போது அந்தக் குழந்தை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அந்தக் குழந்தைக்கு இருப்பது spontaneous human combustion எனப்படும் தானாகவே உடலில் தீப்பற்றும் விநோத நோயாகும். இதுவரை உலகில் 200 பேருக்கு மட்டுமே அந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு அறிவியல் அறிஞர்களான ஜோ நிக்கல் மற்றும் ஜான் பிரஷர் என்பவர்கள் இதுபற்றிய விரிவான விளக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள்.

பொதுவாக மனித உடல் தீப்பற்றி எரிவதற்கு 3000*செல்சியஸ் வெப்பம் தேவை. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் மிகக் குறைவான வெப்பநிலையிலேயே அதாவது மெழுகுவர்த்தி எரிதல் சமையல் அடுப்பு பக்கத்தில் இருக்கும்போது கூட தீப்பற்ற வாய்ப்புண்டு. இப்போது அந்தக்குழந்தை கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதை எதற்காக இங்கு பதிகிறேன் என்றால் , இந்த நோயை விட்டுவிடுங்கள் இதைவிட சாதாரண நோய்களையெல்லாம் நம் கிராம மக்கள் கடவுள் பெயரைக்கூறியும் மூடநம்பிக்கையோடும் அணுகுகின்றனர். என் அனுபவத்தை இங்கே கொஞ்சம் ஜல்லியடிக்கிறேன்.

2007-08 காலகட்டங்களில் நான் சங்கர நேத்ராலயா சார்பாக தமிழகமெங்கும் உள்ள கிராமங்களில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது திண்டுக்கல் அருகேயுள்ள செம்பட்டி எனும் ஊரில் ஒரு 8 வயது சிறுமியை என்னிடம் அழைத்து வந்திருந்தார் அந்தச் சிறுமியின் அம்மா. அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிரச்சினை என்றால் வலது கண்ணில் பார்க்கும்போது பார்க்கும் காட்சியில் சிகப்பு நிற புள்ளி /வட்டம் போன்ற ஒன்று தெரிகிறது. அவளுக்கு அந்தப் பிரச்சினை சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இருக்கிறது. ஏன் இத்தனை நாட்களாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து போகவில்லை என்று கேட்டபோது "முதலில் அவள் சும்மா சொல்கிறாள் என்று நினைத்திருக்கிறார்கள். பிறகு சாமி ஒளி தெரிகிறது என்று சொல்லி விட்டுவிட்டார்கள்" என்று தெரியவந்தது.

அந்தப் பெண்ணின் பார்வையை பரிசோதித்து பார்த்ததில் அவளுக்கு இரண்டு கண்ணிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. விஷன் 6/6p இருக்கிறது. எனக்கும் கூட அவள் பொய்தான் சொல்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது. சரி கம்ப்ளீட்டாக பரிசோதனை செய்வோம் என்று கண்களில் டையலேட் ட்ராப்ஸ் போட்டு கண்ணின் பாப்பாவை விரிவடையச்செய்து அதன்பிறகு ரெட்டினா காமிராவினால் இரண்டு கண்ணின் ரெட்டினாக்களையும் படம் பிடித்துப் பார்த்தேன். வலது கண்ணின் ரெட்டினாவிலுள்ள மேக்குலா எனப்படும் மையப்பகுதியில் சிறிய அளவில் ஒரு இரத்தக்கசிவு இருந்தது தெரிந்தது. நான் சிகப்பு புள்ளி தெரிவதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். ஆனால் ஏன் 8 வயது சிறுமிக்கு கண்ணில் இரத்தக்கசிவு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் எல்லா மெடிக்கல் தொடர்பான படங்களையும் சென்னையிலுள்ள சங்கர நேத்ராலயா விற்கு அனுப்பி அந்தப் பெண்ணை டெலி கான்பரன்சிங்கில் டாக்டர் சுசித்ரா பிரதீப் அவர்களுடன் கன்சல்டிங்கிற்கு ஏற்பாடு செய்தேன். டாக்டரும் மேக்குலாவில் ஏற்பட்ட ரத்தக்கசிவினால் தான் சிகப்பு புள்ளி தெரிவதாக சொன்னார். ஏன் இது ஏற்பட்டுள்ளது டாக்டர் என்று கேட்டேன். டாக்டர் அந்தப்பெண் தலைகீழாக நின்று யோகாசனம் போன்ற ஏதாவது செய்கிறாளா கேளுங்கள் என்றார். பெண்ணின் அம்மாவிடம் கேட்டால் இல்லையென்று சொன்னார். தவிர கண்ணில் எந்த அடியும் பட்டதில்லை.

பிறகு டாக்டர் அந்தப் பெண் மோஷன் ஃப்ரீயாக போகிறாளா இல்லை ரொம்பக் கஷ்டப்பட்டு முக்கி முக்கி போகிறாளா கேளுங்கள் என்றார். நான் கேட்டவுடன் பெண்ணின் அம்மாவும் "ஆமாம். அவள் சுலபமாக டாய்லெட் போவதில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு முக்கி முக்கித்தான் போவாள். அதற்காக தினமும் வாழைப்பழம் கூட தருகிறோம் " என்றார். உடனே டாக்டர் "சிவா ...! தலைகீழாக நிற்பது போன்ற செயலில் ஈடுபடுவர்கள் , தலையில் அதிக பாரம் சுமப்பவர்கள் , இதுபோல ரொம்ப சிரமப்பட்டு மோஷன் போகிறவர்கள் இவர்களுக்கு கூட அதிகப்படியான ஸ்ட்ரெய்னினால் ரெட்டினாவில் சிறிய அளவில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது " என்றார். அதன்பிறகு அந்தப் பிரச்சினைக்கு மிக எளிய வைத்திய முறைகளை சொன்னார். அடுத்த மாதம் அந்த ஊருக்கு சென்று அந்தப் பெண்ணை ஃபாலோஅப் செய்ததில் அவளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. மீண்டும் ஒருமுறை கண்களின் ரெட்டினாவை படம் பிடித்து பார்த்ததில் அந்த இரத்தக்கசிவு மறைந்திருந்தது.

இதை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால் இது ஒரு சாதாரண பிரச்சினை தான். ஆனால் அவர்கள் இதை மூட நம்பிக்கையில் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் இதுவே சீரியஸான பிரச்சினையாகி இருக்கும். ஆகவே எந்தவொரு உடல் சம்பந்தமான பிரச்சினைகளையும் நீங்கள் கடவுள் கொடுத்த தண்டனை என்றோ வேறு ஏதோ மூட நம்பிக்கைகளைக் கொண்டு அர்த்தம் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

நன்றி - சிவசங்கரன் சரவணன்.

Thursday, August 1, 2013

சூரிய சக்தி

http://www.treehugger.com/renewable-energy/bonus-solar-panels-help-keep-buildings-cool-reducing-c-needs.html

Monday, July 29, 2013

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்..!

http://www.gunathamizh.com/2013/07/blog-post_28.html

மூன்று ஞானிகள்.

லியோ டால்ஸ்டாய் என்றாலே ரஷிய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளான ‘போரும் சமாதானமும்’ மற்றும் ‘அன்னா கரீனா’வும் நினைவுக்கு வரலாம். ஆனால் அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளும் கூட மிகச்சிறந்தவையும், பொருள் பொதிந்தவையும் ஆகும். உதாரணத்திற்கு அவருடைய ’மூன்று ஞானிகள்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம்.

ஒரு பிஷப் பாதிரியார் பல யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு கடல்கடந்து இருக்கும் ஒரு புனிதத்தலத்திற்குக் கப்பலில் செல்கிறார். கப்பலில் செல்கையில் அந்தப் புனிதத்தலத்திற்குப் போகும் வழியில் உள்ள ஒரு தீவில் மூன்று மகத்தான ஞானிகள் இருப்பதாக சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டார். மனித குலத்தின் மேம்பாட்டுக்காக அந்த ஞானிகள் சதா சர்வகாலம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சொல்லவே பிஷப்பிற்கு அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. கப்பல் கேப்டனிடம் அவர் அந்தத் தீவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அந்தத் தீவின் கரை வரை கப்பல் செல்ல முடியாதென்றும், தீவருகே சென்று ஒரு படகில் தான் அங்கு செல்ல முடியும் என்றும் கூறிய கேப்டன் அவரை மனம் மாற்றப் பார்க்கிறார். ஆனால் பிஷப் தன் விருப்பத்தில் உறுதியாய் இருக்கவே கேப்டன் ஒத்துக் கொள்கிறார்.

அந்தத் தீவிற்கு சற்று தொலைவில் கப்பல் நிற்க படகு மூலம் அந்தத் தீவிற்கு ஆவலுடன் பிஷப் பயணிக்கிறார். ஆனால் தீவில் மூன்று ஞானிகளைக் காண்பதற்குப் பதிலாக அவர் கண்டது கந்தலாடைகள் அணிந்த வயதான மூன்று கிழவர்களைத் தான். பிஷப்பின் உடைகளைப் பார்த்து அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள பாதிரியார் என்பதைப் புரிந்து கொண்ட கிழவர்கள் அவரை பயபக்தியோடு வரவேற்று உபசரிக்கின்றனர்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசியவுடனேயே அவர்கள் மூவருக்கும், கல்வியறிவோ, பைபிள் பற்றிய ஞானமோ இல்லை என்பது பிஷப்பிற்குத் தெரிந்து விட்டது. இந்த படிப்பறிவில்லாத கிழவர்களைப் போய் ஞானிகள் என்று சொல்லித் தன் ஆவலை வீணாகத் தூண்டி விட்டார்களே என்று எண்ணிய பிஷப் அவர்களிடம் நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டார்.

“நாங்களும் மூவர். நீங்களும் மூவர். எங்கள் மீது கருணை காட்டுங்கள்” என்று சொல்லி பிரார்த்தனை செய்கிறோம்” என்று மூன்று கிழவர்களும் பணிவுடன் சொன்னார்கள். 

அவர்கள் நீங்கள் மூவர் என்று சொன்னது கர்த்தர், பிதா, பரிசுத்த ஆவியைச் சேர்த்துத் தான். 

பிஷப் திகைப்படைந்தார். “இது என்ன பிரார்த்தனை. இப்படியுமா பிரார்த்தனை செய்வார்கள்” என்று அவருக்கு தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்து இவர்களின் அறியாமையை அறிந்த பின் அவர்களுக்கு எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று சொல்லித் தருவது தன் கடமை என்று உணர்ந்த பிஷப் அவர்களுக்கு முறைப்படியாக பிரார்த்தனை செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார். அவர் அவர்களது அறிவுக்கேற்ப எளிய பிரார்த்தனையை தான் கற்றுத் தந்தார் என்றாலும் அதைக் கற்கவே அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இத்தனை வருடங்கள் ஒரு வரி பிரார்த்தனை செய்து வந்த அவர்களுக்கு சில வரிகள் கொண்ட புதிய பிரார்த்தனை சிரமமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?

எப்படியோ அவர்களுக்கு முறைப்படி கற்றுத் தந்த பிஷப் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு படகு மூலம் கப்பலுக்குத் திரும்பினார். அவர் கப்பலை நெருங்கிய சமயத்தில் அந்த மூவரும் அவர் படகை நோக்கி ஓடோடி வந்தார்கள். “ஐயா எங்களை மன்னியுங்கள். எங்களுக்கு மீண்டும் தாங்கள் சொல்லித் தந்த பிரார்த்தனை மறந்து விட்டது. இனியொரு முறை சொல்லித் தருவீர்களா?”

தரையில் ஓடி வருவது போல கடலில் சர்வ சாதாரணமாக ஓடி வந்த அவர்களைப் பார்த்த பிஷப் பிரமித்தார். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி சொன்னார். ”நீங்கள் இது வரை செய்து வந்த பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள் பெரியோர்களே. உங்களுக்கு வேறெந்த பிரார்த்தனையும், போதனையும் தேவையில்லை. முடிந்தால் தயவு செய்து எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்”

பிஷப்பே பழைய பிரார்த்தனையை தொடர்ந்து செய்தால் போதும் என்று அனுமதி அளித்து விட்ட திருப்தியில் அந்த மூவரும் அவரை வணங்கி விட்டு நிம்மதியாகத் தங்கள் தீவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் சென்ற திசையில் ஒரு பொன்னிற ஒளியை அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் கண்டார்கள்.

எந்த வழிபாட்டையும், பிரார்த்தனையையும் புனித நூல்களில் சொல்லப்பட்ட விதங்களை பின்பற்றியோ, முன்னோர் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை பின்பற்றியோ, முறையான சடங்குகள் என்று நாம் நம்பி வருவதை பின்பற்றியோ செய்தால் தான் அது இறைவனை எட்டும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பெரும்பாலான மதத்தலைவர்களும் அப்படியே தான் மக்களை வலியுறுத்துகின்றனர். 

ஆனால் பிரார்த்தனைகளின் மகத்துவம் சடங்கு, சம்பிரதாய வழிகளில் பின்பற்றப்படுவதில் இல்லை. அது ஆத்மார்த்தமாகவும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யப்படுவதிலேயே தான் இருக்கின்றது. எல்லா மதங்களிலும் இந்த செய்தி பிரதானமாகச் சொல்லப்படுகின்றது. 

நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம் சம்பிரதாயத்தைப் பின்பற்றியது அல்ல. ஆண்டாள் வழிபட்ட விதமும் அப்படியே. சபரியின் பக்தியும் அப்படியே. இறைவன் செவிமடுத்து வந்த பிரார்த்தனைகள் பெரும் பண்டிதர்களுடைய பிரார்த்தனைகளாக இருந்ததில்லை. நீண்ட சொல்லாடல்கள் நிறைந்ததாக இருந்ததில்லை. மாறாக அவை தூய்மையான, எளிமையான நெஞ்சங்கள் பெரும் பக்தியோடு செய்யப்பட்ட மனமுருகிச் செய்த பிரார்த்தனைகளாக இருந்திருக்கின்றன. 

தருமி என்ற ஏழைப் புலவனும், கண்ணப்பன் என்ற வேடுவனும், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவியும் பிரார்த்தனையால் இறைவனைத் தங்களிடமே வரவழைத்த கதைகள் நாம் அறிவோம். டால்ஸ்டாய் சொன்ன அந்தக் கதையிலும் தேவாலயங்களில் முறைப்படி நீண்ட நேரம், நீண்ட காலம் முறைப்படி பிரார்த்தனை செய்தும் ஒரு பாதிரியார் அடையாத நிலையை ஒரு வேடிக்கையான வாசகத்தைப் பிரார்த்தனையாகச் சொல்லி வந்த மூன்று கள்ளங்கபடமற்ற கிழவர்கள் அடைந்ததைப் பார்த்தோம்.

எனவே உங்கள் பிரார்த்தனைகள் எளிமையாக இருக்கட்டும். அவை உண்மையாக இருக்கட்டும். அவை நியாயமானவையாக இருக்கட்டும். அவை இதயத்தின் ஆழத்தில் இருந்து வருபவையாக இருக்கட்டும். நீண்ட பிரார்த்தனைகளிலும், சடங்கு, சம்பிரதாயங்களிலும் அதிகமாய் கவனம் செலுத்தாமல் மனத்தூய்மையுடனும், பக்தியுடனும் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனைகள் என்றுமே வீண் போகாது. 

இந்த அருமையான கதையை இணையத்தில் பதிவேற்றிய திரு என். கணேசன் அவர்களுக்கும் ஈழ நேசனுக்கும் மனமார்ந்த நன்றி!
நன்றி - சாரி.

தாய்த் தமிழ்நாடு

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2011/10/blog-post_8183.html

Saturday, July 13, 2013

Wednesday, July 10, 2013

வாழைத்தண்டு மருத்துவ குணம்

வாழைத்தண்டு மருத்துவ குணம்

அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு.

வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.

இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.

தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.

நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

Wednesday, June 19, 2013

Saturday, May 11, 2013

Sunday, May 5, 2013


<a href=" http://inruoruthagaval.com/" title=" inruoruthagaval logo"><img class="aligncenter size-full wp-image-867" height="270" src=" http://inruoruthagaval.com/wp-content/uploads/2012/12/inruoruthagaval-LOGO.jpg " width="180" /></a>
http://inruoruthagaval.com/information/

Thursday, May 2, 2013

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை...

நண்பர் Babu pkவின் சிந்தனையும், பதிவும்.


பகவத்கீதை என்பதே நம் புழக்கத்தில் இருப்பதால் அப்படியே குறிப்பிடுகிறேன். ஏனெனில் இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.

1. முதலில் இதன் காலம்.


வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?

மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.

யுகங்கள் ஒரு வரிசைப்பார்வை
சத்ய யுகம் 1,728,000
திரேத யுகம் 1,296,000
துவாபர யுகம் 864,000
கலியுகம் 432,000

நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால் கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?

2. இரண்டாவது, நிகழ்விடம்.


ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படைவீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.

தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660
யானைப்படை 21,870 x 18 = 3,93,660
குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980
காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300

அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படிப் 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?

3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்?


அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது... உபதேசனை கூட இல்லை... ஒரு கேள்வி-பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)

4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம்.

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 - சுலோ 13)

நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?

5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 - சுலோ 21)

சந்திரன் நட்சத்திரமா?

6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ: |
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- சுலோ 70)

எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகிவிட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச்சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?

7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் (அத் 9- சுலோ 23)

அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- சுலோ 30)

23ம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,
30ம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டு சொல்கிறார்?
யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?

8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10- சுலோ 37)

பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்... எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?

இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிளைக்கலாம்.

இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?

Babu Pk

Sunday, April 21, 2013

குறைந்த செலவில் குளிர் சாதனம்.

“எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கிவைத்து விட்டார்கள்!
நீங்களும் கடந்த மூனு வருசமாத்தான் சொல்லிக்கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்தபாடைக்காணோம்“ - என்று பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டனர் வீட்டில்.

எனக்கோ ஏ.சி.வைப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லை.
உங்கள் முன் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா?
அப்படியானால் இதைப்படிக்கவும்.

ஏ.சி. வைத்தால், ஓர் அறையை இறுகப்பூட்டிக்கொண்டு, சுவாசித்த காற்றையே சுவாசித்துக்கொண்டு, நாளில்பாதியை கழிக்கவேண்டும்.  
அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மை அடிமைசெய்து விடும்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டால், அதிலிருந்து மீளவே முடியாமல் போயிவிடும்.

மேலும், கடுமையான மின்வெட்டு,  
அப்போது என்ன செய்வது?
ஏ.சி.வைத்திருக்கும் நண்பர்களிடம் விளக்கம் கேட்டேன்.  
ஏ.சி.போட்டிருந்தாலும், மின்வெட்டானதும் மின்விசிறியைப் போட்டுக்கொள்வோம். புழுக்கம் தெரியாது, அதற்குள் மின்சாரம் மீண்டும் வந்துவிடும் என்றனர்.

எப்படியிருந்தாலும், ஏ.சி. வாங்க எனக்குச் சிறிதும் விருப்பமேமில்லை.

இருந்தாலும், மாயமானைச் சீதைபொருட்டு ஸ்ரீராமன் பிடிக்கச் சென்றான்.
பார்போற்றும் பரந்தாமனே அப்படிச்செய்துள்ளான்.  
நாமும் நம் மன்னன் காட்டிய வழியில் நடப்பதுதானே நல்லது.
ஏ.சி. வாங்கினால் இல்லம் குளிர்ச்சியாகிறதோ இல்லையோ, இல்லாள் மனம் குளிர்ச்சியாகிவிடும்.

ஆயிரம்தான் இருந்தாலும் எனக்கு மனம் இல்லை.
இயற்கையோடு இசைந்து வாழ வழிதேடியது என்மனம்.
இதற்காகப் பலகோணங்களில் யோசித்தேன்.
கடைசியாக ஒருவழி மனதில் உதித்தது.

1984 ஆம் ஆண்டு மதுரையில் (ரீகல் தியேட்டர் அருகில் உள்ள) ‘ராஜா ரேடியோஸ்‘ என்ற கடைக்கு மதிய நேரம் சென்றிருந்தேன்.  அந்தக் கடையில் ஏ.சி. இல்லை. ஆனாலும் அவ்வளவு வெயிலிலும் புழுக்கமாக இல்லை. 
இதற்குக் காரணம் என்ன என்று முதலாளியிடம் கேட்டேன்?

அவர் கடையின் வாயில் அருகே இருந்த வெண்டிலேட்டர் மின்விசிறியைக்( ventilator fan) காண்பித்தார்.  அந்த மின்விசிறி, கடையில் இருக்கும் வெப்பக்காற்றை வெளியே அனுப்புவதற்குப் பதிலாக, வெளியே உள்ள காற்றை கடைக்குள் அனுப்பும் வகையில் மாற்றி மாட்டிவைக்கப்பட்டிருந்தது.  எனக்குச் சற்று வியப்பாக இருந்தது.
 
 
கடைமுதலாளி ஒருசிறு விளக்கம் அளித்தார்.
“மதியம் 3மணி வரை வெளியில் வெயில் கடுமையாக இருக்கும்.  
பின்னர் சிறிது காற்று வீச ஆரம்பித்துவிடும்.  இதனால் கடைக்குவெளியே வெப்பம் குறைந்துவிடும்.  ஆனால் கடைக்கு உள்ளே புழுக்கமாக இருக்கும்.
எனவே மின்விசிறியை மாற்றியமைத்து, வெளியே உள்ள காற்றைக் கடைக்குள் திருப்பிவிட்டுள்ளேன்.  இதனால் கடைக்குள் புழுக்கமாக இருக்காது“ என்றார்.

முதலாளியின் இந்தத் தொழில்நுட்பத்தை நாமும் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது.

காரைக்குடியில் கடைக்குச் சென்று ஒரு எக்சாஸ்ட்விசிறி வாங்கினேன்.  மின்விசிறி ரூபாய்.1150-00. வயர் ரூபாய்.35-00, சுவிட்சு ரூபாய்.20-00. (மொத்தம் 1205-00) செலவு வந்தது.

வீட்டில் கொண்டு வந்து மாட்டினேன்.
இரவு நேரம் ஆரம்பித்தவுடன், இந்த விசிறியைப் போட்டுவிட்டேன்.
அருமையாக வேலை செய்கிறது.
 

Saturday, April 6, 2013

தமிழ்க் கிறுக்கன் !: "ஒரு குடிகாரனின் உவ்வா"

தமிழ்க் கிறுக்கன் !: "ஒரு குடிகாரனின் உவ்வா": "ஒரு குடிகாரனின் உவ்வா"

வெலவாசிய குறைக்க அரசு மலிவு விலை அம்மா உணவகத்தில் ரேஷன் கடை அரசி
மணக்க மணக்க உணவுகள் தயாரிக்கப் படுக...

Welcome To our Website!

Welcome To our Website!

Tuesday, April 2, 2013

onlytamil.in: இன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட

onlytamil.in: இன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட: சந்தேகப்படும்படியான இணைய தளங்களுக்குச் செல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், பயன்படுத்தும் பிரவுசரை அடிக்கடி நீங்கள் அடிக்கடி சுத்தம...